News August 23, 2025
இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 7, 2026
போர் பதற்றம்… ஈரானுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

பிராந்திய போர் பதற்றம் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன், EAM ஜெய்சங்கர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ஈரானின் தற்போதைய சூழல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும் அதில் பேசப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கை வெளியுறத்துறை அமைச்சருடன் அப்பாஸ் பேசியுள்ளார். அப்போது தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்க உதவியதற்காக அப்பாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 7, 2026
மழையால் போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

WC-ல் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால், மழையோ அல்லது வேறு காரணத்திற்காகவோ போட்டி பாதியில் தடைபட்டால் கோப்பை யாருக்கு என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். அப்படி போட்டி ரத்தானால் மீண்டும் திங்கட்கிழமைக்கு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அன்றைய தினமும் போட்டி பாதிக்கப்பட்ட இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.


