News March 25, 2025
இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு இங்கி. தடை

2009ல் LTTEக்கு எதிரான போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதிகள் ஷவேந்திர சில்வா, கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, LTTEயில் இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு துணை அமைச்சரான விநாயகமூர்த்தி ஆகியோர் அந்நாட்டிற்கு வர தடை மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 26, 2025
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம்?

கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்கள் மாற்றப்பட்ட நிலையில், பாஜக தலைமை அண்ணாமலையை மட்டும் மாற்றவில்லை. எப்போது வேண்டுமானாலும், புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், அமித்ஷா உடனான சந்திப்பில் அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்று இபிஎஸ் கெடுபிடி காட்டியதாகவும், அதற்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்ததாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News March 26, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) சவரனுக்கு ₹80 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,195க்கும், சவரன் ₹65,560க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து, ஒரு கிராம் ₹111க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது.
News March 26, 2025
தனஸ்ரீயை கடுமையாக சாடிய ரோஹித் மனைவி?

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, தனஸ்ரீயை ‘கோல்டு டிக்கர்’ என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகியுள்ளது. ‘கோல்டு டிக்கர்’ என்பது, பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடன் உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்.