News September 2, 2025
புதிய மாநில அமைப்பு செயலாளர்: EPS அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் எம்.வின்சென்டை அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமித்து இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் தொகுதியில் இருந்து 1977, 1980 ஆகிய பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற இவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பிடித்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கட்சியினருக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவதற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 2, 2025
SCO மாநாடு ஒரு நாடகம்: புலம்பும் டிரம்பின் அசிஸ்டன்ட்

SCO மாநாட்டில் மோடி- புடின்- ஜீ ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதை பார்த்து டிரம்ப்பும் அவரது அமைச்சர்களும் விமர்சனங்களை வீசுகின்றனர். அந்த வரிசையில் கருவூல அமைச்சர் ஸ்காட் பெசண்ட், SCO மாநாடு ஒரு நாடகம் என்றும், இந்தியாவும், சீனாவும் அதில் மோசமான நடிகர்கள் எனவும் சாடினார். ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைன் போரை தூண்டுவதற்கு சமம் என்றும் விமர்சித்துள்ளார்.
News September 2, 2025
வங்கி கடன் வட்டி குறைகிறது

செப். 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி விகிதமான MCLR-ல் பஞ்சாப் நேஷனல் வங்கி 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. அதேபோல், பேங்க் ஆஃப் இந்தியா 5 – 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News September 2, 2025
கட்சியில் இருந்து கவிதாவை இடைநீக்கம் செய்த KCR

BRS கட்சியில் இருந்து தனது மகளை சந்திரசேகர ராவ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிந்தர் ராவ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள், கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.