News August 18, 2024
பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் CM?

ஜார்க்கண்ட் முன்னாள் CM சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஏற்கெனவே, தனது ஆதரவு MLAக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் டெல்லிக்கு வந்துள்ளார். எனினும், சொந்த வேலைகளுக்காக வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ED கைது காரணமாக ஹேமந்த் சோரனுக்கு பதிலாக 5 மாதம் சம்பாய் சோரன் CM பதவி வகித்தார். தொடர்ந்து, அவர் பிணையில் வந்ததும் பதவி பறிபோன அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
Similar News
News August 14, 2025
ஆம்னி பஸ்களில் ஜெட் வேகத்தில் உயர்ந்த கட்டணம்!

3 நாள்கள் தொடர் விடுமுறையால் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிலையில், ஆம்னி பஸ்களில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,700, மதுரைக்கு ₹3,800, நெல்லைக்கு ₹4,000, தூத்துக்குடிக்கு ₹3,500, கோவைக்கு ₹3,700 என தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 26280445 எண்களில் புகார் அளிக்கலாம் என TN அரசு தெரிவித்துள்ளது.
News August 14, 2025
உரிமைத் தொகை.. 12 லட்சம் பேரின் நிலை என்ன?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலையை பரிசீலிப்பதில் ஏன் தாமதம் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும், ஆனால் 1 மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஏமாற்றுவேலை என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
News August 14, 2025
ஆபரேஷன் சிந்தூர்: 9 பேருக்கு ‘வீர் சக்ரா’ விருது

79-வது சுதந்திர தினத்தையொட்டி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் கேப்டன்கள் ரன்ஜீத் சிங் சித்து, மணீஷ், அனிமேஷ் பட்னி, குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சர்தக், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஆர்ஷ்வீர் சிங் தாகூர் ஆகியோர் இவ்விருதை பெறவுள்ளனர்.