News September 28, 2024
6ஆவது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்த FOREX

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு செப்., 20ஆம் தேதி 692.3 பில்லியன் டாலர்களை எட்டியது. RBI தரவுகளின்படி, FOREX தொடர்ந்து 6ஆவது வாரமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 5 வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3 பில்லியனாக உயர்ந்த நிலையில், இந்த வாரத்தில் கையிருப்பு $2.84 பில்லியன் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் $603.6 பில்லியனில் இருந்து $605.7 பில்லியனாக FOREX சொத்துக்கள் அதிகரித்துள்ளன.
Similar News
News November 6, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹164-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
News November 6, 2025
கூட்டநெரிசல் மரணங்களால் தான் RCB விற்கப்படுகிறதா?

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.
News November 6, 2025
Snapchat-ல் இனி Perplexity AI

நமது Whatsapp-ல் எப்படி மெட்டா AI இணைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல இனி Snapchat-ல் Perplexity AI இணைக்கப்பட உள்ளது. ஜனவரி, 2026-ல் இருந்து Snapchat பயனர்கள் இந்த வசதியை பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே சுமார் ₹3,300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக ஸ்னாப் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% வரை உயர்ந்துள்ளது.


