News August 10, 2024
வரலாற்று உச்சம் தொட்ட அந்நியச் செலாவணி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $7.53 பில்லியன் அதிகரித்து, $674.91 பில்லியனை எட்டியுள்ளது. இது வரலாறு காணாத உச்சமாகும். முன்னதாக, அதிகபட்ச கையிருப்பு ஜூலை 18ஆம் தேதி $670.85 பில்லியனாக இருந்தது. ஆகஸ்ட் 2ஆம் தேதி கணக்கின்படி, தங்கம் கையிருப்பு $2.40 பில்லியன் உயர்ந்து, $60.09 பில்லியனாக அதிகரித்துள்ளது. SDR பொறுத்தமட்டில், $41 மில்லியன் குறைந்து, $18.16 பில்லியனாக உள்ளது.
Similar News
News November 25, 2025
மீனவர் நலனில் PM மோடிக்கு அதிக அக்கறை: RN ரவி

மீனவர் நலனில் PM மோடி அதிக அக்கறை செலுத்தி வருவதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மீனவர் தின விழாவில் பேசிய அவர், மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News November 25, 2025
புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 25, 2025
விஜய்க்கு ஆதரவு.. வெளிப்படையாக அறிவித்தார்

விஜய் அழைத்தால் தவெகவிற்காக பேச செல்வேன் என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுகவை விட தவெக வலிமையாக உள்ளது. இதனால், பல தொகுதிகளில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி நிலவும் எனக் கூறிய அவர், களநிலவரமும் அப்படித்தான் இருக்கிறது என்றார். மேலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேசமாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


