News March 20, 2024
தேர்தலுக்கு பிறகு அந்நிய முதலீடு அதிகரிக்கும்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறதா?

KAS தவெகவுக்கு சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என நயினார் கூறியுள்ளார். கட்சியிலிருந்து ஒருவர் போனால், அவருடன் சேர்ந்து வாக்குகளும் போய்விடுமா என கேட்ட அவர், அதிமுகவுக்கு தனி வாக்கு வங்கி உள்ளது, மக்கள் ஆதரவும் குறையவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், KAS-ஐ பாஜக இயக்குவதாக வரும் தகவல்கள் பொய் எனவும், அப்படியெனில் அவர் இங்குதான் வந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
News November 27, 2025
இவர்தான் #Thalaivar173 டைரக்டரா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி, வெளியேறிவிட்ட நிலையில், அந்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி, கதிர் ஆகியோரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
News November 27, 2025
அதி கனமழை… மக்களே வெளியே வராதீங்க

வங்கக்கடலில் சற்றுநேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.


