News March 20, 2024
தேர்தலுக்கு பிறகு அந்நிய முதலீடு அதிகரிக்கும்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 30, 2025
ராசி பலன்கள் (30.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 30, 2025
டெங்குவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: EPS

TN-ல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். டெங்கு எதிரொலியாக TN முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று X-ல் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


