News March 20, 2024
தேர்தலுக்கு பிறகு அந்நிய முதலீடு அதிகரிக்கும்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க சிறப்புக்குழு

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மோதலில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
News April 18, 2025
புகழ் பெற்ற ‘M*A*S*H’ பட நடிகர் பேட்ரிக் காலமானார்

மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஹாலிவுட்டின் நகைச்சுவை தொடரான ‘M*A*S*H’ நடிகர் பேட்ரிக் அடியார்டே (82) காலமானார். நாடகத்திலிருந்து வந்ததால் சார்லி சாப்ளின் சாயலில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘The King and I’, ‘High Time’, ‘World War II’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். பேட்ரிக்கின் மறைவு ஹாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News April 18, 2025
பைலட் பயிற்சிக்கான விதியில் அதிரடி மாற்றம்?

12-ம் வகுப்பில் கலை, வணிகவியல் பிரிவுகளில் வெற்ற பெற்ற மாணவர்களும் இனி விமான பைலட் ஆகலாம். இதற்காக விதிமுறைகளை மாற்ற விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 12-ம் வகுப்பில் அறிவியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விமான பைலட்டுக்கான பயிற்சி பெற முடியும். அந்த அடிப்படை கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது.