News April 12, 2024

அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கணக்கீட்டின்படி, அந்நியச் செலாவணி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 648.562 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இருப்பை பொருத்தமட்டில், 2.39 பில்லியன் டாலர் உயர்ந்து 54.55 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights 18.17 மில்லியன் டாலரில் இருந்து 24 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Similar News

News July 10, 2025

ரோபோ சங்கர் மகள் கூறியது அனைத்தும் தவறே: TN அரசு!

image

தமிழகத்தில் குழந்தைகளுக்கு சிந்தனை திறன் தற்போது குறைந்துவிட்டதாக ரோபோ சங்கர் மகளும் அவரது கணவரும் தெரிவித்த கருத்து ஆதாரமற்றது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. யூடியூப் சேனலில் அவர்கள் தெரிவித்துள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானது என்றும், Right Brain activation & ஹெகுரு பயிற்சிகளுக்கு மத்திய அரசு எந்தவித பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

image

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை

image

தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக்கிங் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்களில் <<17013093>>இன்டர்லாக்<<>> அமைப்புகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளனர். அதேநேரம், தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்களே இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!