News March 22, 2025
அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து உயர்வு

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 14 நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,600 கோடி அதிகரித்து, ரூ.56.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Similar News
News March 23, 2025
திமுக அரசு நல்லா குறட்டை விட்டு தூங்குது: அன்புமணி

மதுரை தனக்கன்குளத்தில் நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 23, 2025
49 வயது இயக்குநரை டேட் செய்யும் பவி டீச்சர்?

பவி டீச்சராக என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை பிரிகிதா தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா(49) என்பவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி வைரலாகின. ஆனால், அவை உண்மையில் வதந்தி எனக் கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் இயக்கிய பெத்தகபு -1 என்ற தெலுங்கு படத்தில் பிரிகிதா நடித்துள்ளார். அதிலிருந்து அவர்களுக்குள் பழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தற்போது வரை இருவரும் எதுவும் பதிலளிக்கவில்லை.
News March 23, 2025
இஃப்தார் நோன்பு திறக்க விஜய் உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கட்சி நிர்வாகத்திற்காக தவெகவில் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தனை இடங்களிலும் முறைப்படி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கட்சியினர் தவறாமல் நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.