News April 28, 2025
கட்டாயத்தின் பேரில் நீக்கம்: தமிழிசை தாக்கு

இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
என்னது ‘கனிமா’ இந்த பாட்டோட காப்பியா!

‘மன்மதன்’ படத்தில் வரும் ‘என் ஆசை மைதிலியே’ பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ‘கனிமா’ பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இசைக்கோர்வை, சவுண்ட் மிக்சிங், பாடலின் எமோஷ்னல் டோன் என அனைத்தும் அந்த பாடலை மனதில் வைத்து உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், ‘கனிமா’ பாடல் உருவான விதம், BTS காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
ஆரஞ்ச் தொப்பியை தட்டித் தூக்கிய ‘ரன் மெஷின்’..!

ஐபிஎல் வந்தாலே கோலியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிக ரன்கள் குவித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 443 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ்(427), சாய் சுதர்சன்(417), பூரன்(404), மார்ஷ்(378) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த சீசன் முடியும்போது ஆரஞ்ச் தொப்பியை யார் கைப்பற்றுவார்?
News April 28, 2025
தினமும் காலை இதை செய்வதால்…

சூர்ய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்கும் ஆசன முறையாகும். தினமும் காலை இதனை செய்வதால் ✦ரத்த ஓட்டம் சீராகும். இதய துடிப்பு மேம்படும் ✦அனைத்து தசைகளுக்கும் அழுத்தம் கிடைப்பதால், தசைகள் புத்துணர்ச்சி பெறும் ✦பதட்டம் குறையும். மனதில் அமைதியும் தெளிவும் கிடைக்கும் ✦காலையில் சூர்ய நமஸ்காரம் செய்வது, கலோரிகளை எரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது ✦ நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். SHARE IT.