News July 6, 2025
வரலாற்றில் முதல் முறை.. சரித்திரம் படைத்த கில் படை!

இந்திய அணி 2-வது டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 1014 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்திய அணி டெஸ்ட் மேட்ச் ஒன்றில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. 1000 ரன்களை கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 916 ரன்களை அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
Similar News
News July 6, 2025
ரெட் ஜெயன்ட் பாணியில் களமிறங்கும் விஜய்?

ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் படத்தின் BTS காட்சிகளில், லைகா உடன் ‘JSJ’ என்ற தயாரிப்பு நிறுவன பெயரும் இடம்பெற்றிருந்தது. இது ஜேசனின் கம்பெனி என அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மாத இதழில், பதிவு செய்யப்பட்ட புதிய Producers பட்டியலில் சஞ்சய்யின் பெயரும் உள்ளது. இதனால், உதயநிதி பாணியில் மகன் மூலம் தயாரிப்பில் இறங்குகிறாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.
News July 6, 2025
திருச்செந்தூர் கோவிலுக்கு ₹206 கோடி வழங்கிய சிவ் நாடார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக, தொழிலதிபர் சிவ் நாடார் ₹206 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். சிவ் நாடாரின் ‘வாமா சுந்தரி அறக்கட்டளை’ மூலமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 7, திங்கட்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
News July 6, 2025
தமிழகத்தை உலுக்கிய தம்பதியின் தற்கொலை!

வட்டார போக்குவரத்து அலுவலர்(RTO), தனது மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணியன்(54) திருச்சி RTO அலுவலக பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இவர்களது மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.