News March 18, 2024

சிவகங்கை மக்களின் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

சிவகங்கை: வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.? குட் நியூஸ்.!

image

சிவகங்கை மாவட்ட மக்கள், வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு தகவலை SHARE பண்ணுங்க..

News February 17, 2026

சிவகங்கை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

சிவகங்கை: கொத்துக் கொத்தாக கஞ்சா பறிமுதல்.!

image

சிவகங்கை அருகே உள்ள கோவனூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் அருகே, சிவகங்கை தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முத்துப்பாண்டி என்ற அசோக் (27) என்பவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் போலீசார் அவரிடம் சுமார் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!