News March 18, 2024
கள்ளக்குறிச்சி மக்களின் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும்.<
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
News July 4, 2025
காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்பி

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியது. கடந்த மாதம் கொடுத்த தனது புகார் தொடர்பாக இன்று முறையிட சென்ற போது இளைஞரை போலீசார்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.