News December 18, 2024
ஒரே ஆண்டில் 3ஆவது முறையாக..!

கர்நாடகாவிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118.53 அடி தண்ணீர் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 16, 2025
பாமக MLA-க்கள் ஒற்றுமையா இருக்கணும்: உதயநிதி

சேலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் பாமக MLA-க்களான அருள் (ராமதாஸ் தரப்பு), சதாசிவம் (அன்புமணி தரப்பு) ஆகியோர், தமிழக அரசை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த 2 MLA-க்கள் போட்டி போட்டு அரசை பாராட்டியதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரி பேசியதாக தெரிவித்த அவர், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பாமக பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

இந்திய இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI ரேங்கிங்கில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் அவர் முதல் இடம் பிடிப்பது இது 2-வது முறையாகும். 735 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க, இங்கிலாந்தின் Sciver-Brunt 731 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் ஸ்மிருதி மந்தனா முதல் ODI-ல் 58 ரன்களை அடித்திருந்தார்.
News September 16, 2025
‘இறந்த மகளுடன் தினமும் பேசுகிறேன்’

தற்கொலை செய்து கொண்ட தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி எமோஷனலாக பேசியுள்ளார். மகளின் இழப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘இது இழப்பு இல்லை. அவள் என்னுடன்தான் இருக்கிறாள், அவளுடன் தினமும் பேசுகிறேன், என்னுடனே அவள் பயணிக்கிறாள். அவளை மிஸ் செய்கிறேன் என்று சொன்னால் சரியாக இருக்காது’ என உருக்கமாக பேசினார். 2023-ல் மீரா தனது 16 வயதில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.