News August 6, 2024
தபால் துறை வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

தபால் துறையில் 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. அந்த வேலைகளுக்கு விண்ணப்பித்தோருக்கு தபால் துறை சார்பில் indiapostgdsonline.gov.in இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு விண்ணப்பித்தபோது அளித்த தகவலை, இன்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை திருத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News January 15, 2026
அர்னால்டு CM ஆகியிருப்பார்: கார்த்தி சிதம்பரம்

திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு எப்போதோ தமிழ்நாடு CM ஆகியிருப்பார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்குக்காக தான் படங்களை மக்கள் பார்ப்பார்கள் எனவும், தமிழகத்தில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் பார்ப்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
இன்று ஜல்லிக்கட்டில் இதை செய்தால் ₹2 லட்சம் பரிசு

அவனியாபுரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கினால் ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தோட்டா’ என்ற அந்த காளையை அடக்கும் காளையருக்கு இந்த பரிசு கிடைக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க மாநிலத் தலைவர் முடக்கத்தான் மணி இதனை அறிவித்துள்ளார். இதனால், வாடிவாசலில் துள்ளி வரும் காளையை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
News January 15, 2026
சற்றுமுன்: விஜய்யின் அடுத்த மெகா சம்பவம்!

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்த விஜய், அடுத்ததாக எந்த பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், EPS கோட்டையாக கருதப்படும் சேலத்தில்தான் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்ததும் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


