News February 28, 2025
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன்தான் நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஹார்மோன், இருட்டிய பின்னர்தான் சுரக்கத் தொடங்கும். அப்போது நாம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. இதனால்தான், அத்தகைய வேளைகளில் நமக்கு தூக்கம் வருவதில்லை. எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டால், நிம்மதியாக தூங்கலாம்.
Similar News
News February 28, 2025
200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத், 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.
News February 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.