News March 24, 2025
புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகளை தெரிஞ்சிக்கோங்க.*உப்பிட்டு தயாரிக்கப்படும் கருவாட்டில் உள்ள நைட்ரோசாமைகளால் மூக்கில் புற்றுநோய் ஏற்படும். *சிவப்பு இறைச்சி அதிகம் உட்கொள்வதால் குடல் புற்றுநோய் உருவாகும். *கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையால் கணைய புற்றுநோய் வரும். *மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில் உள்ள Perfluorooctanoic acid அமிலத்தால் புற்றுநோய் வரும். உஷார்..
Similar News
News March 26, 2025
சிங்கம் இருக்க நீ போய் விட்டாயா? வைரமுத்து உருக்கம்!

மாரடைப்பின் காரணமாக காலமான, நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு திரைத்துறையினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா என உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே… சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா… உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
News March 26, 2025
நீட் தேர்வு: அடுத்தடுத்து 2 பேர் தற்கொலை!

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீஹார் மாணவர் ஹர்ஷ்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் தங்கியிருந்த ஓட்டலில் அவரது உடல் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் ஜோத்பூரில் மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தானில், இந்த ஆண்டு மட்டும் தேர்வு அழுத்தத்தால் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த எண்ணம் எழுந்தால், 104 என்ற எண்ணை அழைக்கவும்!