News March 30, 2025

பறக்கும் செவ்வாய்: பண மழையில் 3 ராசிகள்!

image

துணிச்சல் குணத்தின் அதிபதியான செவ்வாய், வரும் 3ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்வதால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்கிறது. 1) கடகம்: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்குபவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். 2) சிம்மம்: நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். 3) கன்னி: எதை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும்.

Similar News

News April 1, 2025

பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

image

இன்றைய IPL போட்டியில், பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ அணி. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர் மார்ஷ் 0 ரன்களிலும் கேப்டன் பண்ட் 2 ரன்களிலும் வெளியேறினர். இறுதியாக, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

News April 1, 2025

பழம்பெரும் நடிகை காலமானார்

image

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சியான் பார்பரா ஆலன் (78), உடல்நலக் குறைவால் காலமானார். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார். The Waltons தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் நடித்த படங்களுள் Billy Two Hats, Love American Style, Scream, Pretty Peggy, The Lindbergh Kidnapping Case உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.

News April 1, 2025

HAPPY NEWS: மரணம் முடிவல்ல, மீண்டும் உயிர் பெறலாம்

image

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி சாம் பார்னியா. ஒருவர் மரணமடைந்த பின்னும் பல மணி நேரத்துக்கு, ஏன் சில நாள்களுக்கு கூட மூளை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதேபோல உடல் செல்களும் கூட சில நாள்கள் வரை அழிவதில்லை. அதனால், ECMO இயந்திரங்கள், சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் மூளையை மீண்டும் உயிர் பெறச் செய்யலாம் என்கிறார் பார்னியா. இது வரமா? சாபமா?

error: Content is protected !!