News December 31, 2024

பூக்களின் விலை கடும் உயர்வு

image

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ மல்லி ₹3,000, கனகாம்பரம் ₹800, ஜாதி மல்லி ₹750, ஐஸ் மல்லி ₹2,000, முல்லை ₹1,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மார்கழி மாதம் விசேஷ நாட்கள் என்பதாலும், புத்தாண்டு பிறப்பையொட்டியும் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Similar News

News March 5, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

News March 5, 2026

தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

image

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.

News March 5, 2026

மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

image

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!