News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News January 12, 2026
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் முன்னேறி, குறைந்தது 5 திருநங்கைகளுக்கு முன்னேற உதவி செய்து சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில், திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கையர்களுக்கான விருது, ரூ. 1லட்சம் காசோலையுடன் வழங்கப்படுகிறது. தகுதியுடைய திருநங்கைகள் தங்களது கருத்துருக்களை (awards.tn.gov.in) என்ற தமிழக அரசின் இணையதளத்தில் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.


