News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News November 28, 2025
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

கடந்த 6 மணிநேரத்தில் 13 கிமீ வேகத்தில் ‘டிட்வா’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. இந்த புயல், நவ.30-ல் வடதமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரம் வழியாக வங்கக்கடல் பகுதியை கடக்கும் என்றும் IMD கணித்துள்ளது. எனவே, அதிகாலை 4 மணி வரை குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். Stay safe
News November 28, 2025
அதுக்குள்ள இத்தன வருஷம் ஆகிடுச்சா யோகிபாபு?

நக்கல், நகைச்சுவை, குணச்சித்திரம் என தனக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களை கச்சிதமாக நடித்து, தனது தனித்துவமான உடல்மொழியால் கொண்டாடப்படுபவர் யோகிபாபு. இவர், திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவரது திரை பயணத்துக்கு இடையே சமூக சேவைகளும் உள்ளன. யோகிபாபு படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?
News November 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 533 ▶குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ▶பொருள்: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.


