News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News January 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News January 8, 2026
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.
News January 8, 2026
கைக்குழந்தையுடன் பாக்யராஜ் படங்களை பார்த்தேன்: CM

திரை உலகில் பாக்யராஜ் 50 ஆண்டு நிறைவு செய்ததையொட்டி நடந்த விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, கதைக்காக பாக்யராஜா, பாக்யராஜுக்காக கதையா என்று சொல்லும் அளவுக்கு வெற்றிப் படங்களை கொடுத்தவர் என அவர் புகழாரம் சூட்டினார். வெற்றி நாயகனாக அவர் வலம் வந்ததாகவும், கைக்குழந்தையாக உதயநிதியை தூக்கிக்கொண்டு சென்று அவரது படங்களை பார்த்ததாகவும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.


