News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News January 5, 2026
BCCI-யிடம் கேப்டன் கில் வைத்த கோரிக்கை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், BCCI-யிடம் வைத்த கண்டிஷன் பேசும் பொருளாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அணியின் வீரர்களுக்கு 15 நாள் பயிற்சி கேம்ப் நடந்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளாராம். தொடருக்கு முன்பாக, வீரர்களின் Focus & உடலை வலுவாக்கும் இது உதவும் என குறிப்பிடப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இந்திய அணியை இது மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.
News January 5, 2026
இது இனி உங்க தலையிலும் ஒட்டியிருக்கலாம்!

Zomato CEO தீபிந்தர், தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருவியின் பெயர் ‘Temple’. டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ள இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகவும், ஒரே வேகத்திலும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறதாம். மேலும், இதன் மூலம் நரம்பியல் ஆரோக்கியம், மூளையின் செயல்திறனை கவனிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இது வருங்காலத்தில் அனைவரின் தலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.
News January 5, 2026
வடிவேலு போல EPS: அமைச்சர் சிவசங்கர்

EPS பேசும்போது வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது என அமைச்சர் சிவசங்கர் கிண்டலடித்துள்ளார். அந்த காமெடி சீனை விவரித்த அவர், டீ கடையில் 2 பேர் பேப்பர் படிக்கும்போது தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல தலையிட்டு வடிவேலு உதார் விடுவார். அதேபோல தான், அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால் வந்தது என EPS நடிக்க வேண்டியிருப்பதாக கூறி அவரை சாடியுள்ளார்.


