News May 16, 2024
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News November 23, 2025
கூட்டணி: குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., அறிக்கை

காங்., சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்ததால், TVK உடன் கூட்டணி இல்லை என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், காங்., வெளியிட்ட அறிக்கையில் திமுக என்றோ, இண்டியா கூட்டணி என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மொட்டையாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதனால், விஜய் உடன் கூட்டணி பேச்சு தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!
News November 23, 2025
ரஜினியுடன் 3-வது முறை இணைகிறாரா?

ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவரா அவரா என ஆயிரக்கணக்கான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் ரஜினி இன்னும் எந்த இயக்குநரையும் இறுதி செய்யவில்லை. இதனிடையே நேற்று விமான நிலையத்தில் பா.ரஞ்சித்தை எதிர்ச்சையாக ரஜினி சந்தித்து பேசினார். உடனே பா.ரஞ்சித்துடன் 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் இணையப்போகிறார் என்ற கதைகள் வர தொடங்கியது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து கபாலி, கலா ஆகிய 2 படங்களில் பணியாற்றினர்.


