News May 16, 2024
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News August 22, 2025
பாசிஸ்ட்டுகளை பார்த்து சிலர் பம்முகிறார்கள்: உதயநிதி

TN அரசியலில் சில அடிமைகள் பாசிஸ்ட்டுகளை பார்த்து பம்முகிறார்கள் என DCM உதயநிதி காட்டமாக பேசியுள்ளார். சென்னையில் Ex அமைச்சர் ரகுமான்கான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரகுமான்கான் எழுதிய ‘மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை’ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், சிலர் இன்று டெல்லிக்கு அடிமைகளாக இருப்பதாக மறைமுகமாக விமர்சித்தார்.
News August 22, 2025
Specified Employee வருமான வரி விலக்கில் மாற்றம்

Specified Employee-ன் வருமான வரம்பு ₹50,000-லிருந்து ₹4 லட்சமாக உயர்த்தி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வகை ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கும் வட்டியில்லா கடன், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கு இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கை பெறுவதற்கான வருமானம் ₹2 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
News August 22, 2025
Fantasy App-களை கைவிடும் BCCI?

IPL-க்கு MY 11 CIRCLE App ஸ்பான்ஸர் செய்து வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்ட ஆன்லைன் கேமிங் மசோதாவால், இந்த ஆப் முடங்கும் சூழலில் உள்ளது. இதுபற்றி பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே BCCI செயல்படும் என்றார். அரசு உத்தரவிட்டால், கடந்த காலங்களில் சிகரெட், மது நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்து செய்தது போல், இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பும் ரத்தாகும் என்றார்.