News May 16, 2024
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News November 25, 2025
2026 தேர்தலுக்கு மெகா பிளான் போடும் EPS

சட்டமன்ற தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு <<18382869>>EPS அறிவுறுத்தியுள்ளதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை EPS வழங்கியுள்ளார். அதேபோல், ஜனவரிக்குள் மெகா கூட்டணி அமைக்க மாபெரும் திட்டம் இருப்பதாகவும் நிர்வாகிகளுக்கு EPS உறுதி அளித்துள்ளார்.
News November 25, 2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு

இந்திய அரசியலமைப்பின் 76-வது ஆண்டு தினத்தை, நாளை (நவ.26) சிறப்பாக கொண்டாட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் CM ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காலை 11 மணிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசியலமைப்பு நெறிமுறைகளை பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யும்படியும் குறிப்பிட்டார்.
News November 25, 2025
BREAKING: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்குமரன், MLA அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் விரைவில் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினார். இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் பாமகவை இணைக்க NDA தரப்பினர் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?


