News May 16, 2024
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News November 15, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைப்பதில்லை என்று விஜய் கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக ECI-க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தவெகவை அழைக்காமலேயே ஆலோசனை கூட்டங்களை நடத்துவது ஜனநாயகம் ஆகாது. எனவே, இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 15, 2025
ஜம்மு காஷ்மீர் வெடிவிபத்து தற்செயலானது: DGP விளக்கம்

J&K நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என அம்மாநில டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்துள்ளார். ஃபரீதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். இதில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 15, 2025
10 ஆண்டுகளாக Bank Account யூஸ் பண்ணலையா?

10 ஆண்டுகளை கடந்தும் எந்த பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்குகளை ‘UDGAM’ என்ற போர்ட்டல் மூலம் மீட்டெடுக்கலாம். வாடிக்கையாளர் (அ) சட்டப்பூர்வ வாரிசுகள், தங்களது மொபைல் எண், பயனர் பெயரை உள்ளிட்டு தகவலை பெற்று, பணத்தை எடுக்கலாம். அதேநேரம், நேரடியாக வங்கிகளுக்கு சென்று ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவதொரு அடையாள அட்டையை சமர்ப்பித்தும் பணத்தை பெறலாம்.


