News May 16, 2024

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Similar News

News November 19, 2025

பொய் சொல்லும் CM ஸ்டாலின்: அன்புமணி

image

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பொய்யை தவிர CM-க்கு வேற எதுவும் தெரியவில்லை என்றும் போதிய முதலீடுகள் இல்லாததால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் எனவும் சாடினார்.

News November 19, 2025

BREAKING: வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. செக் பண்ணுங்க

image

கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2,000-ஐ மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையையும் (₹4,000) சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News November 19, 2025

PM மோடி அணிந்திருக்கும் வாட்ச்சின் சிறப்பு

image

PM மோடி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி மட்டுமல்ல, ஃபேஷன் உணர்வும் கொண்டவர். அந்தவகையில், அவர் அணிந்துள்ள வாட்ச் ஒரு தனி சிறப்பை கொண்டது. அதில், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் அச்சிடப்பட்ட புலியின் உருவம் பொறித்த கடைசி ₹1 நாணயம் இடம்பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் வாட்ச் நிறுவனம், ஜப்பானின் மியோட்டா நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்ச்சை தயாரித்துள்ளது. இதன் விலை ₹55,000 -₹60,000 ஆகும்.

error: Content is protected !!