News August 19, 2025
FLASH: நாய் கடிக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சோகம்

சென்னை, சேலத்தில் நாய் கடிக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். சேலம், இலவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி(43) 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். அவர் முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இன்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னை குமரன்நகரில் தடைசெய்யப்பட்ட Pit Bull நாய் கடித்ததில் கருணாகரன்(55) சற்றுமுன் உயிரிழந்தார். தெருவில் நாய்களிடம் உஷார்!
Similar News
News January 21, 2026
EPS-க்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த TTV

ஜெயலலிதாவின் நல்லாட்சியை NDA கூட்டணி சார்பில் TN-ல் மீண்டும் அமைத்திட நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் TN-க்கு புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வரலாற்று வெற்றியை படைப்போம் என்றும், கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய EPS-க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 21, 2026
பள்ளிகளுக்கு மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் குடியரசு தினமான ஜன.26 எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
News January 21, 2026
மெடிக்கல் மிராக்கிள்: ஆண் வயிற்றில் கர்ப்பப் பை!

ம.பி.,யில் இயங்கி வரும் பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில் 47 வயது ஆண் ஒருவர், அடிவயிறு வலியால் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு கருப்பை வளர்வதாக முடிவுகள் வந்ததை பார்த்து ஆடிப்போயுள்ளார். இதையடுத்து, ஒரு ஆணுக்கு எப்படி கருப்பை வளரும் என அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், சுகாதாரத்துறையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


