News August 5, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

நேற்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 24,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மீண்டும் டிரம்ப் வரியை உயர்த்த உள்ளதாக எச்சரித்துள்ளதால் அதன் தாக்கம் பங்குசந்தையில் நிலவுவதாக கூறப்படுகிறது.
Similar News
News August 5, 2025
BREAKING: நாளை மறுநாள் முதல் +1, +2 அசல் சான்றிதழ்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
News August 5, 2025
அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சராக அதிக நாள்கள் இருந்தவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். 2,256 நாள்கள் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை, அமித்ஷா(2,258) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளார். அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்த போதே ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாஜகவின் தேசிய தலைவர், குஜராத்தின் உள்துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளையும் அமித்ஷா வகித்துள்ளார்.