News October 22, 2025
FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சற்றுமுன் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.
Similar News
News January 15, 2026
தமிழகத்தில் 5 IAS அதிகாரிகள் இடமாற்றம்

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக விசாகன், சுகாதாரத்துறை கூடுதல் செயலாளராக உமா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக ரத்னா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 15, 2026
பொங்கல் பண்டிகையும் சூரியனும்

சூரியனை வழிபடுவது ஐம்பூதங்களையும் வழிபடுவதற்கு சமம் என்று நன் முன்னோர்கள் கருதினர். சூரிய வழிபாட்டினால் தோல்நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்றும் நம்பினர். இதன் காரணமாக சூரியன் வடக்கு திசையை நோக்கி பயணிக்க தொடங்கும் தை முதல் நாளில் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சங்க காலம் தொடங்கி நாமும் பொங்கலை கொண்டாடி வருகிறோம்.
News January 15, 2026
0% மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு படிக்கலாம்!

NEET PG 3-ம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவு, EWS- 7% (103 மதிப்பெண்கள்), SC/ST/OBC – 0% (-40 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்ளதால் -40 மதிப்பெண்கள் எடுத்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 18,000 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


