News October 22, 2025

FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் மழை காரணமாக சற்றுமுன் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.

Similar News

News October 22, 2025

புடினிடம் பேசுவது Waste Of Time: டிரம்ப்

image

உக்ரைன் போர் தொடர்பாக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார் டிரம்ப். இன்னும் நேரம் தேவைப்படுவதாக புடின் கூறியதால் ஹங்கேரியில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து, புடின் தயாராக இல்லாதபோது அவரை சந்தித்து டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என டிரம்ப் கூறியிருக்கிறார். மீண்டும் டிரம்பை சந்திக்க புடின் நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 22, 2025

வக்கீல்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்

image

TN மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு ₹999 செலுத்தினால் மட்டும் போதும். இதில், விபத்து மருத்துவ செலவுக்கு ₹3 லட்சம், எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ₹25 லட்சம், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு <>www.bctnpy.org<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News October 22, 2025

எங்கெங்கு எவ்வளவு மழை?

image

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 வரை அதிகபட்சமாக புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 21 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!