News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News July 4, 2025
பழைய ஓய்வூதிய திட்டம்: விரைவில் குட் நியூஸ்

தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதாவது இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
News July 4, 2025
ALERT:தினமும் குட்டித் தூக்கம் போடுறீங்களா… ஆபத்து!

வழக்கமாக குட்டித்தூக்கம் எடுக்காதவர்களை விட, தினசரி குட்டித்தூக்கம் தூங்குகிறவர்களுக்கு high BP வர 12%-மும், மாரடைப்பு ஏற்பட 24%-மும் வாய்ப்பு அதிகம் என்கிறது அண்மை ஆய்வு. இதற்காக பிரிட்டனில் 3,60,000 பேரிடம் 11 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. குட்டித் தூக்கத்தால் இரவுத் தூக்கம் பாதிப்பது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாம். பொதுவாக, குட்டித்தூக்கம் உற்சாகத்தை தரும் என கூறப்படுவதுண்டு.