News September 28, 2025
FLASH: அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். முன்னதாக, விஜய் பிரசாரம் செய்த இடத்தை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 110 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 28, 2025
கரூர் துயரமும், அரசியல் தலைவர்களின் நிலைபாடும்

கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்கள் பறிபோன விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது ஆளும் தரப்பின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனவும், விஜய் சரியாக திட்டமிடாததால் ஏற்பட்ட விளைவு என்றும் மாறி மாறி கருத்துகள் வருகின்றன. இதில் அரசியல் தலைவர்களின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள மேலே போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.
News September 28, 2025
அர்ஷ்தீப் சிங் மீது புகார் கொடுக்கும் பாகிஸ்தான்

இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பாகிஸ்தான் ICC-ல் புகாரளிக்க முடிவு செய்துள்ளது. IND vs PAK போட்டியின் போது, பாக்., வீரர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்றும், இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதை போலவும் சைகை காட்டினர். இதை எதிர்த்து அர்ஷ்தீப் செய்த சைகை வைரலானது. இதனால் தங்களுக்கு ICC 30% அபராதம் விதித்த போல, அர்ஷ்தீப் சிங்கிற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பாக்., முயன்று வருகிறது.
News September 28, 2025
விஜய்க்கு அண்ணாமலை முக்கிய அட்வைஸ்

பிரசார வியூகத்தை விஜய் மாற்றிக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். சனிக்கிழமைகளில் பிரசாரம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், ஒரு மாவட்டத்தில் 2 அல்லது 3 இடங்களில் பிரசாரம் செய்தால் தங்களை மகிழ்ச்சியுடன் நேரில் பார்ப்பதோடு, நெரிசல் இருக்காது என்றார். மேலும், அரசு அமைத்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையத்தில் நம்பிக்கை இல்லை எனவும், CBI விசாரணை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.