News August 25, 2024
அனுமதியின்றி கொடி: தவெக தலைமை எச்சரிக்கை

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்சி கொடியை நிர்வாகிகள் ஏற்றி வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி எங்கும் கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், உத்தரவை மீறி அனுமதியின்றி கொடியேற்றினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News August 9, 2025
கவர்னர் இல.கணேசனுக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், அவரது சென்னை வீட்டில் நேற்று வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்போலோ ஹாஸ்பிடலில் ICU பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக மூத்த தலைவராக அறியப்படும் அவர், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கவர்னராக இருந்துள்ளார்.
News August 9, 2025
பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: ரஷ்மிகா

நடிகை ரஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது என பகீர் புகார் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இது தன்னை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
News August 9, 2025
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.