News April 11, 2025
ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரத்தில் மட்டும் 2000-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது.
Similar News
News January 8, 2026
சோனியா காந்திக்கு இந்த உடல்நிலை பிரச்னையா?

சுவாசக்கோளாறு பிரச்னையால் கடந்த திங்களன்று <<18777044>>சோனியா காந்தி<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியின் காற்று மாசுபாடு மற்றும் குளிரால் அவரது ஆஸ்துமா பிரச்னை தீவிரமடைந்ததாகவும், தற்போது அவரது உடல்நலம் முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.
News January 8, 2026
ஊழல் ஊற்றான திமுகவை மக்களே ஓட விடுவர்: நயினார்

K.N.நேரு மீதான ஊழல் புகாரை சுட்டிக்காட்டி, திமுகவின் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என நயினார் விமர்சித்துள்ளார். பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்கள் மேடையில் வெளிப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், மீண்டும் அரியணை ஏறி ஊழல் செய்யத் திட்டமிடும் திமுகவின் எண்ணம் நசுக்கப்படும் என்றார். மேலும், பணக்கட்டுகளை எண்ணிய திமுக உடன்பிறப்புகள் விரைவில் சிறை செல்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
News January 8, 2026
பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்குக: பாஜக

TN-ல் ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது. இந்நிலையில், புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுப் பணம் வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. அங்கு ₹750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தலா ₹5,000 வழங்குமாறு CM ரங்கசாமிக்கு, புதுச்சேரி பாஜக தலைவர் விபி ராமலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணியில் இருக்கும் பாஜகவின் கோரிக்கைக்கு ரங்கசாமி செவி சாய்ப்பாரா?


