News April 11, 2025
ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரத்தில் மட்டும் 2000-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது.
Similar News
News January 17, 2026
ELECTION: அதிமுக கோட்டையை தட்டி தூக்கும் திமுக!

கடந்த 2021 தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் திமுக ஒன்றில் கூட வெல்லவில்லை. இந்நிலையில், வரும் தேர்தலில் 7 தொகுதிகளில் வெல்லும் என அக்னி செய்தி நிறுவனம் கணித்துள்ளது. தொண்டாமுத்தூர், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களை அக்னி நிறுவனம் துல்லியமாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
News January 17, 2026
28 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக

<<18877155>>மஹாராஷ்டிராவில்<<>> நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரேக்களின் கோட்டையாக கருதப்பட்ட மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 1996 முதல் தாக்கரே சிவசேனாவின் மேயரே மும்பையை ஆண்டு வந்த நிலையில், இனி பாஜக மேயர் செங்கோல் ஏந்த உள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக கூட்டணி 118, சிவசேனா (தாக்கரே) 65 இடங்களில் வென்றுள்ளது.
News January 17, 2026
பற்றி எரியும் ஈரான்.. களத்தில் இறங்கிய புடின்!

<<18874125>>ஈரான்<<>> விவகாரத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் மற்றும் இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன் அவர் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


