News June 15, 2024
மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் நேற்றுடன் நிறைவடைந்தது. 2 மாதங்கள் இடைவெளி இருந்ததால் அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மீன்களின் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 13, 2025
சருமம் முதல் இதயம் வரை.. முள்ளங்கி இலைகளின் நன்மை

குளிர்காலத்தில் தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்தவகையில், முள்ளங்கி இலைகளை உணவில் சேர்த்து சமைப்பது பல ஆரோக்கியங்களை தரும். முள்ளங்கி இலைகளை நன்கு கழுவிவிட்டு சாலட்டில் (அ) சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம். கீரை போல சமைத்தும் (அ) சாறாகவும் குடிக்கலாம். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அவற்றின் பலன்களை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 13, 2025
யாருடன் கூட்டணி? தவெக அறிவிப்பு

திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என தவெக அறிவித்துள்ளது. இதற்கிடையே CONG கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாத இறுதியில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக – CONG கூட்டணி அமைந்தால், மாற்றுத்திட்டங்களுக்கு திமுக தயாராகி வருகிறதாம்.
News November 13, 2025
வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர்: எல்.முருகன்

தூய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க திமுக அரசு முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலில் தூய்மை பணியாளர்களின் பணிகளை வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு திமுக அரசு தாரைவார்த்த நிலையில், தற்போது அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியையும் வழங்க டெண்டர் கோரி இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.


