News October 19, 2025

மீனவர்கள் பிரச்னை பேசி தீர்க்கப்படும்: இலங்கை PM

image

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும் என இலங்கை PM ஹரினி அமரசூரியா தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு, அணுகுமுறையின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 17, 2026

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மேலும் ₹4,000.. GOOD NEWS

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகை ₹ 5,000 லிருந்து ₹9,000 மாக உயர்த்தப்படலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 21-24 வரை மட்டுமே இருந்த வயது 18-25-ஆக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே போல, 12 மாதங்களாக இருந்த இன்டர்ன்ஷிப் காலம், 6- 9 மாதங்களாகவும் குறைக்கப்படவுள்ளதாம். விரைவில் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

News March 17, 2026

பெண்கள் பாதுகாப்பு.. திமுகவை சாடிய அன்புமணி

image

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதவருக்கு எதற்கு முதல்வர் பதவி என்று அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். திமுகவினர் ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதை TN பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இதுபோன்ற ஒரு ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை என்று திமுகவை கடுமையாக தாக்கினார். மேலும், இதை 3 மகள்களை பெற்ற ஒரு தந்தையாக சொல்வதாக தெரிவித்தார்.

News March 17, 2026

நாட்டின் வீரத் திருமகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நாட்டு மக்கள் அமைதியாக வாழ, எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்கள் ஏராளம். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மக்கள் நாயகனை நாடு இழந்திருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பணியில் இருந்த நாயக் திலக் சிங், மயங்கி விழுந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து, ராணுவ மரியாதையுடன் நாயக் திலக் சிங் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. RIP

error: Content is protected !!