News April 5, 2025
மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு‘ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினார்.
Similar News
News September 18, 2025
RAC டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வது எப்படி?

ரயில் புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TTE, உங்களுக்கான இருக்கையை நியமித்து தர வேண்டும் என்ற விதி உள்ளது. *முதலில் TTE-ஐ தொடர்புகொண்டு, காலியாகவுள்ள இருக்கையை ஒதுக்கி தருமாறு முறையிடுங்கள். *Chart தயாரான பிறகு, IRCTC செயலியில் ‘Chart Vacancy’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *ரயில் எண்ணை உள்ளிட்டால், நீங்கள் செல்லும் ரயிலிலுள்ள காலி இருக்கைகள் காட்டும். *அதை TTE-யிடம் தெரிவித்தும் முறையிடலாம்.
News September 18, 2025
சருமம் பளபளக்க உதவும் ஜூஸ்

பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கின்றன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அவை என்ன ஜூஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க. மேலும், வேறு ஏதேனும் பழம் அல்லது காய்கறி உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
பாக் – சவுதி ஒப்பந்தம்: அலர்ட் மோடில் இந்தியா

<<17745829>>பாகிஸ்தான்- சவுதி <<>>அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருவர் தாக்கப்பட்டால், மற்றொருவர் உதவிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில், நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அனைத்து வழிகளிலும் நாட்டின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறியுள்ளது.