News March 18, 2025
மீனவர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 7, 2025
8 மாவட்டங்களில் நள்ளிரவு மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நாளை(7.7.25) தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News July 6, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவுடனான கூட்டணி தற்காலிகமானதுதான் என அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா கூறியதற்கு <<16965259>>அண்ணாமலை கருத்து கூற மறுத்தது<<>> பேசுபொருளாகியுள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அண்ணாமலையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs