News April 13, 2025
மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை, நாகையில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹600 – ₹800 வரை விற்பனையான வஞ்சிரம் இன்று ₹1,000-க்கும், ₹200 – ₹300 வரை விற்கப்பட்ட சங்கரா கிலோ ₹600-க்கும் விற்பனையாகிறது. நாளை(ஏப்.14) முதல் ஜூன் 15 வரை வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News December 7, 2025
வயசானாலும் Performance-ல் குறைவைக்காத Ro-Ko!

2027 WC தொடரின் போது, Ro-Ko இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், SA-வுக்கு எதிரான ODI தொடரில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், தொடர் நாயகன் விருதை வென்றது கோலி. முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் இவை அனைத்தும் ரோஹித் வசம் இருந்தது. பெர்பார்மென்ஸில் குறைவைக்காத அவர்களின் கனவுக்கு வழிவிடலாம் அல்லவா?
News December 7, 2025
BREAKING: விலை தடாலடியாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹2 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலையில் மாற்றமின்றி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
News December 7, 2025
CM செய்வது கண் துடைப்பு நாடகம்: நயினார்

ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக லேப்டாப்கள் வழங்குவது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது லேப்டாப் வழங்குவேன் என CM அறிவித்துள்ளது கண் துடைப்பு நாடகம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதை CM-ஆல் மறுக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.


