News April 18, 2024
இந்தியாவில் வாக்களிக்கும் முதல் இலங்கைத் தமிழர்

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி. இவரின் பெற்றோர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தவர்கள். தற்போது 38 வயதாகும் நளினி, இந்தியாவில் பிறந்ததை ஆதாரமாக கொண்டு வழக்குத் தொடுத்து பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்.
Similar News
News August 17, 2025
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒரே கட்டணம்

விரைவில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதைக் கருத்தில்கொண்டு ஆளும் JD(U) – BJP அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் (முதல்நிலைத் தேர்வு) ₹100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதன்மைத் தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்று செயல்படுத்தலாமா?
News August 17, 2025
BREAKING: பிறந்தநாளில் சின்னம்மாவை இழந்த திருமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு துக்க நாளாக அமைந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரின் சின்னம்மா செல்லம்மாள் (78) இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் நினைவுகளை கண்ணீருடன் உருக்கமாக பதிவிட்டுள்ள திருமா, சின்னம்மாவின் உடலை பார்க்க விரைந்துள்ளார். அமைச்சர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்திய பிறகு அவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
News August 17, 2025
சாம்பியன் பட்டம் வென்றார் தான்யா ஹேமந்த்

வடக்கு மரியானா தீவுகளில் Saipan International 2025 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இப்போட்டியானது 15 புள்ளிகள் கொண்ட செட் முறையில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேமந்த் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானின் கனே சகாய் உடன் மோதிய அவர், 15-10, 15-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவருக்கு வாழ்த்து கூறலாமே..