News April 23, 2025
மறைந்த பின் போப் ஆண்டவரின் முதல் PHOTO

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த போட்டோவை பதிவிட்டு, அமைதியை விரும்பி மாமனிதரே, அமைதியாக உறங்குங்கள் என்று பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 23, 2025
1 சவரன் தங்கம் ரூ.1 லட்சம்.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் சேர்த்து ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
News April 23, 2025
திருமணம் இப்படித்தான் இருக்கணும்.. மனம் திறந்த சிம்பு

தக் லைஃப் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார். அதில், ‘திருமணம் பிரச்னை இல்லை, மக்கள்தான் பிரச்னை. விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை குறைந்துவிட்டது. நீ இல்லையென்றால் வேறொருவர் என்ற மனநிலை அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன். அப்படி இருக்க கூடாது. சரியான நேரம் வரும்போது திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல்?

டாஸ்மாக் சோதனை வழக்கில் ஐகோர்ட் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. ED சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி TN அரசு, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர். விசாரணையை தொடர ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டால் டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் எழும்.