News April 25, 2024

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்

image

நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 8, 2025

ரயில்வேயில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்

image

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10th, 12th அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15 முதல் 24 வரை ஆகும். இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News September 8, 2025

CM ஸ்டாலின் மீது இயக்குநர் கடும் விமர்சனம்

image

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உழைக்கும் மக்களாகிய தூய்மை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க CM ஸ்டாலின் காவல்துறையை ஏவி அவர்களை அடித்து விரட்டியதாக சாடியுள்ளார். CM ஸ்டாலினை போலி சமூகநீதி முதல்வர் என்று லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

கேப்டனை திட்டி வளர்ந்தவர் சீமான்: விஜய பிரபாகரன்

image

சீமான் டிரெண்டிங்கில் இருக்கும் நபர்களை திட்டுபவர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் டிரெண்டிங்கில் இருந்த கேப்டனை திட்டி சீமான் பெரிய ஆளாகினார் எனவும் பிறரை திட்டியே வாக்குகளை பெற்று கட்சியை வளர்த்தார் என்றும் கூறினார். மேலும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என விஜய பிரபாகரன் பேசினார்.

error: Content is protected !!