News March 17, 2024

தேர்தல் நடத்தை விதி மீறலில் தமிழகத்தில் ”முதல் வழக்கு”

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், நடத்தை விதிகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் தமிழகத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகங்கையில் தேர்தல் விதிமுறையை மீறி, ஊர்வலம் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News

News December 26, 2025

திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<> இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

விடுதலையாகும் சவுக்கு சங்கர்

image

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த மெட்ராஸ் HC, புகாரளிக்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்ததன் நோக்கம் குறித்து போலீஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தனிநபரை கைது செய்ய முழு அதிகாரத்தையும் போலீஸ் பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கோர்ட் கூறியுள்ளது. விசாரணை அதிகாரியிடம் பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 26, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள், மேல்முறையீடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதில், உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, மாதந்தோறும் 15-ம் தேதி உங்களது வங்கிக் கணக்கிலும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். SHARE

error: Content is protected !!