News August 27, 2024

30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

Similar News

News December 13, 2025

நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

News December 13, 2025

நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பகுதி தூரம் ரத்து

image

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் டிச.15 முதல் பிட்லைன் மற்றும் இன்டர்லாக்கிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனால், பல ரயில்கள் பகுதி மற்றும் முழு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் டிச.15 – ஜன.28 வரை நெல்லை – தூத்துக்குடி இடையே ரத்து. மைசூரு எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை வாஞ்சிமணியாச்சி வரை மட்டும் இயங்கும். பல பாசஞ்சர் ரயில்களும் டிச.17 முதல் டிச.23 வரை ரத்து செய்யப்பட்டுளளது.

News December 13, 2025

நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

திருநெல்வேலி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!