News August 27, 2024

30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

Similar News

News December 2, 2025

நெல்லை: 80 லட்சம் பண மோசடி!

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மென் பொறியாளரிடம் இணையவழி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் பணத்தை இழந்தார். முதலீட்டை திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டதால், அவர் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News December 2, 2025

நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவார தினத்தை முன்னிட்டு நேற்று தாமிர சபையில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News December 2, 2025

எஸ் ஐ ஆர் புதிய கால அட்டவணை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கணக்கீட்டிற்கான நாள் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விசாரணை சரிபார்ப்பு 16 முதல் ஜனவரி 15 வரை நடக்கிறது. இதற்கான பட்டியல் விவரத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!