News August 27, 2024

30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

Similar News

News November 6, 2025

நெல்லை: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நவ.7 அன்று காலை 10:30 மணிக்கு இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. திறன் வாய்ந்த ஆசிரியர்கள், ஸ்மார்ட் போர்டு வசதியுடன் பயிற்சி அளிக்க உள்ள நிலையில் வாராந்திர மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். SHARE IT

News November 6, 2025

பாளை: வாலிபரை தாக்கி நகைகள், செல்போன் பறிப்பு

image

கொங்கந்தானபாறையை சேர்ந்த சுபின் வண்ணார்பேட்டையில் இருந்து வடக்கு பைபாஸ் ரோடு வழியாக வெள்ளகோவில் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி ஏடிஎம் கார்டு, செல்போன், தங்க செயினை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த சுபின் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குது பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

நெல்லையில் உயரும் குடிநீர் கட்டணம்

image

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

error: Content is protected !!