News May 9, 2024
கைரேகை பதிவு கட்டாயம்

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கிக் கணக்குக்கு அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. வாடிக்கையாளர்கள் கைரேகையை கேஸ் ஏஜென்சி சென்று பதிய வேண்டும்.
Similar News
News August 21, 2025
ஆபத்தான முறையில் விஜய் தொண்டர்கள்..

மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள், குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர். இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் தொண்டர்கள் செல்கின்றனர்.
News August 21, 2025
Health Tips: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா?

சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு அதை சமைக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். இவ்வாறு செய்வதால் அது விஷமாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஃப்ரிட்ஜின் குளிர்ந்தநிலை பூஞ்சை வளர்ச்சியை மெதுவாக்குகிறது. இதனால் காற்று புகாத அளவுக்கு மாவை pack செய்து, அதை 1 நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் எனவும், 2 நாள்களை தாண்டினால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News August 21, 2025
INDIA கூட்டணியின் ஒரே அரசியலமைப்பு ‘ஊழல்’

‘PM, CM பதவி பறிப்பு’ மசோதாவை ‘கருப்பு மசோதா’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 130-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார். உங்கள் கூட்டணி (INDIA) உண்மையிலேயே பின்பற்றும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக திமுக அரசு தக்க வைத்ததாகவும் சாடியுள்ளார்.