News April 14, 2025
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு.. அல்லாடும் முதியோர்

ரேஷன் அட்டைகளில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகிறது. முன்பு பயோமெட்ரிக் பதிவு 40% உறுதியானால் போதும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 90% ஆக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முதியோர் பலர் கைவிரல் ரேகை தேய்ந்த நிலையில், பயோமெட்ரிக் பதிவாகாமல் அல்லாடுகின்றனர். பலர் 30 நிமிட நேரம் வரை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கவனிக்குமா அரசு?
Similar News
News November 25, 2025
விசிகவே ஒரு பல்கலை தான்: திருமாவளவன்

அம்பேத்கர் கனவை சிதைப்பதே பாஜகவின் நோக்கம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். வெயில், மழை பாராது பொருளில்லாமல் மந்தைகளை போல் மக்கள் காத்துக் கிடக்கும் போக்கு கொண்ட அரசியல் மாற வேண்டும் என்றார். எனவே, ஒவ்வொருவரும் அரசியலில் தெளிவுபெற வேண்டும் என்ற திருமா, அதற்காக கல்லூரி செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் விசிகவே ஒரு பல்கலை தான் என குறிப்பிட்டார். உங்கள் கருத்து என்ன?
News November 25, 2025
‘விஷால் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை’

லைகா தொடர்ந்த வழக்கில், கடனாக பெற்ற ₹21.29 கோடியை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த விஷாலுக்கு சென்னை HC தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், வட்டி மட்டுமே ₹40 கோடி செலுத்தும் அளவு விஷால் பெரிய பணக்காரர் அல்ல என வாதிடப்பட்டது. அப்படியானால், விஷாலை திவாலானவர் என அறிவிக்க தயாரா என HC அமர்வு கேள்வி எழுப்பியது. தனி நீதிபதியின் உத்தரவுக்கும் HC தடை விதித்தது.
News November 25, 2025
UK-ல் இருந்து லட்சுமி மிட்டல் வெளியேறுகிறாரா?

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல், UK-வில் எஃகு உருக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். இன்று உலகின் 104-வது செல்வந்தராகவும் உள்ளார். இந்நிலையில், UK-வில் குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் வாரிசு வரி உள்பட தொழிலதிபர்களுக்கான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், UK-வை விட்டு வெளியேறி, துபாயில் குடியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவருக்கு மாளிகை ஒன்றும் உள்ளதாம்.


