News April 25, 2025
விவசாயிகளுக்கு அபராதம்.. எஸ்.பி.வேலுமணி கேள்வி

பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணை என்ற பெயரில் விவசாயிகளுக்கு அபராதம் விதித்துள்ளது என பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அரசு நிலத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
Similar News
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
News April 25, 2025
முதல் பந்திலேயே CSK-க்கு அதிர்ச்சி கொடுத்த ஷமி

சென்னை Chepauk மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH இடையிலான போட்டி, இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்துவரும் CSK அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே ர ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் நடையை கட்டினார். தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.