News June 29, 2024
வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதியுதவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம். *கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், சிறாரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம். * விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம். *விஜய் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். *சட்டம் – ஒழுங்கை மீறாமல் கண்ணியமாக நடக்க வேண்டும்.
News September 19, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. செப்.22 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே செப்.22, 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE.
News September 19, 2025
ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரோபோ சங்கர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘அம்பி’ படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ளார். டப்பிங் கலைஞர், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர் உள்ளிட்டவற்றின் மூலம் அவருக்கு சுமார் ₹5 – ₹6 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக ‘ஏசியாநெட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரோபோ சங்கரை போலவே அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.