News November 17, 2024
Finance Tips: கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

பங்குச்சந்தையில் கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு பெருமளவு நஷ்டமின்றி, வருமானத்தை அளிப்பதாக நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த கடன் பத்திரங்களில் தனிநபர்கள் நேரடியாகவோ (அ) MF மூலமாகவோ முதலீடு செய்யலாம். புதிய முதலீட்டாளர்கள் முதலில் குறைந்த தொகையுடன் முதலீடு செய்து அனுபவத்தைப் பெறலாம். அவற்றின் வட்டி விகிதம், கால அளவு, விலகல் & செயல்பாட்டு விதிகளை அறிய வேண்டியது முக்கியம் என்கின்றனர்.
Similar News
News March 3, 2026
ஜோர்டான் மன்னருடன் PM மோடி பேச்சு

ஜோர்டான் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை தொடுக்கும் நிலையில், அந்நாட்டின் மன்னர் அப்துல்லா 2-விடம் PM மோடி உரையாடியுள்ளார். அப்போது, ஜோர்டானில் நிலவும் சூழல் குறித்து கவலை கூறியதாகவும், ஜோர்டான் மக்களின் நலன், அமைதி, பாதுகாப்புக்கு இந்தியாவின் சார்பாக மீண்டும் ஆதரவை தெரிவித்தாகவும் X பதிவில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோர்டானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதற்காக அவர் நன்றியும் கூறியுள்ளார்.
News March 3, 2026
‘போர் பதற்றம்’ தமிழர்களுக்கு பாதிப்பில்லை: TN அரசு

போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பற்றி அவர்களது உறவினர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், போரினால் தமிழர்களுக்கு பாதிப்பில்லை என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு மையத்திடம் உதவிகேட்ட 974 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவை தொடங்கியவுடன் அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் TN அரசு குறிப்பிட்டுள்ளது.
News March 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.


