News March 29, 2024
நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
Similar News
News March 12, 2026
இனி டெலிகிராமில் புது படங்களை பார்க்க முடியாது..

OTT-க்கு பணமில்லை என்பதால் பெரும்பாலானோர் புது படங்களை டெலிகிராமில் பார்க்கின்றனர். இதனால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி ஜியோ சினிமா, அமேசான் பிரைம் நிறுவனங்கள் புகார் எழுப்பியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பதிவேற்றப்படும் படங்கள் பதிவேற்றும் 3,100 சேனல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்கள் கருத்து?
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!


