News May 20, 2024

சினிமா இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள்

image

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “வடக்கே ஒரு நாள் சம்பளமாக ₹1 லட்சம் தருவார்கள் எனில், தெற்கே மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் தருவார்கள். ஆனால், தென்னக இயக்குநர்கள் அவர்கள் அருகே கூட நம்மை அண்டவிட மாட்டார்கள். அவர்கள் ஈகோ மிக்கவர்கள்” என சாடினார்.

Similar News

News March 7, 2026

மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

image

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News March 7, 2026

3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

image

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.

News March 7, 2026

வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

image

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!