News October 19, 2024
கணவருடன் சண்டை: குழந்தைகளுக்கு கொடுமை

சீனாவில் தாய் ஒருவர் தனது குழந்தைகளிடம், கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அவரை கோபமடைய செய்ய மகன் மற்றும் மகளை அடுக்குமாடி குடியிருப்பின் 23வது மாடிக்கு வெளியே உள்ள ஏசி யூனிட்டில் உட்கார வைத்துள்ளார். அவர்களை காப்பாற்ற வந்த கணவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை கவனித்து வந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவலித்து அவர்களை மீட்டனர்.
Similar News
News August 9, 2025
எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன்

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என திருமா தெரிவித்துள்ளார். ஒரு பார்ப்பனிய பெண் (ஜெயலலிதா) திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் MGR என விமர்சித்த திருமா, கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என கூறுகிறார்கள், எம்ஜிஆர், ஜெ., குறித்து பேசுவது கிடையாது. தமிழக அரசியலின் மையமாக இருப்பது கருணாநிதி எதிர்ப்பு மட்டும்தான் என சாடினார்.
News August 9, 2025
நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: EPS

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது என்றார். மேலும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
News August 9, 2025
டிராபிக் போலீஸ் ஸ்பாட் ஃபைன் கட்ட சொல்லி மிரட்டினால்..

சரியான டாக்குமெண்ட் இல்லாமல் சென்று டிராபிக் போலீசிடம் சிக்கினால், உடனடியாக ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் E-challan பெற்றுக் கொண்டு, அடுத்த 60 நாள்களில் ‘mParivahan’ செயலி மூலம் ஃபைன் கட்டலாம். டிராபிக் போலீஸ் அடாவடித்தனமாக நடந்துக் கொண்டால், அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அடிக்கடி போலீஸ்கிட்ட சிக்கும் Friends-க்கு இத ஷேர் பண்ணுங்க.