News December 14, 2024

அமைதியாக போராடுங்கள்: விவசாயிகளுக்கு SC அறிவுரை

image

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி நோக்கி ஊர்வலம் செல்ல முற்பட்ட அவர்களை, ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்துள்ளனர். அவர்கள் பயணிக்கும் டிராக்டர்களால் பல கி.மீ. தூரம் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பாலாவில் டிச.14-17 வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

image

நாய் கடித்தவுடன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ➤நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவுங்கள் ➤ஆல்கஹால் (அ) கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யணும் ➤கடிபட்ட இடத்தில் மிளகாய் பொடி, எண்ணெய் என எதையும் தடவ வேண்டாம் ➤எந்த ஒரு கிரீமையும் அப்ளை செய்யக்கூடாது ➤ரேபீஸ் ஊசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டியது அவசியம். SHARE IT.

News September 15, 2025

கத்தாருக்காக இஸ்ரேலை எச்சரித்த டிரம்ப்

image

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் USA-க்கு பங்கு இல்லை என டிரம்ப் விளக்கமளித்துள்ளார். கத்தாரும் அமெரிக்காவும் நல்ல நட்புறவை கொண்டிருப்பதாக கூறிய அவர், இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். அதோடு, கத்தாரும் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்துவதற்கான வழியை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

News September 15, 2025

பாமக தலைவர் அன்புமணி: ECI அங்கீகாரம்

image

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்(ECI) கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதற்கான கடிதத்தை காட்டினார். மேலும், கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அங்கீகரித்துள்ளதாகவும், மாம்பழம் சின்னமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!