News May 13, 2024
வாக்குச்சாவடிகளில் பயங்கர மோதல்

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பலநாடு உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் நிர்வாகிகள் இடையே மோதல் நிலவி வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் முறைகேடு செய்ய முனைவதாக இரு கட்சியினரும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளனர்.
Similar News
News August 22, 2025
பீடிக்காக ஒரு கேமியோவா? ஆமிர் கான் விளக்கம்

‘பீடியை பற்ற வைக்கவா பாலிவுட்டில் இருந்து வந்தீர்கள்?’ என்ற கேள்வியை ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஆமிர் கானிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆமிர் கான், கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதே தனது வேலை, இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற அவர், அவருடன் இணைந்து நடிப்பது பெருமை என்றும் விளக்கமளித்துள்ளார்.
News August 22, 2025
Specified Employee என்றால் யார்?

ஒரு நிறுவனத்தின் இயக்குநரே (Director) ‘Specified Employee’ என அழைக்கப்படுகிறார். இவர் கம்பெனியில் கணிசமான பங்குகளை வைத்திருக்க வேண்டும். தான் பணியாற்றும் நிறுவனத்தில் 20% வாக்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இவரது வருமானம் முன்னதாக ₹50,000-க்கு கீழ் இருக்கக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. இது தற்போது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவருக்கான <<17479799>>வருமான வரி<<>> சலுகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
News August 22, 2025
விஜய்க்கு தேர்தலில் தக்க பதிலடி: அமைச்சர் KN நேரு

40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள தலைவரை அங்கிள் என்ற விஜய்யின் தராதரம் அவ்வளவுதான் என அமைச்சர் KN நேரு கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 பேர் கூடிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். CM ஸ்டாலின் குறித்த விஜய்யின் கருத்துக்கு திமுக, சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.