News February 11, 2025
டெல்லியில் கிரிமினல் வழக்கு உள்ள MLAக்கள் குறைவு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738996875472_1241-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் 31 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம், ஒருவர் மீது கொலை முயற்சியும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான வழக்கும் உள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ளதாக அறிவித்த 43 MLAக்களை விட குறைவாகும்.
Similar News
News February 11, 2025
கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739253605313_1173-normal-WIFI.webp)
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்தவர்களின் பட்டியலில், 98 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மா 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 179 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 137 வெற்றிகளுடன் கோலி 2ஆம் இடத்திலும், 104 வெற்றிகளுடன் முகமது அசாருதீன் 3ஆம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் கங்குலி (97) 5ஆவது இடத்தில் உள்ளார்.
News February 11, 2025
‘ஊழல்’.. அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739254415443_55-normal-WIFI.webp)
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை அண்ணாமலை பரப்புகிறார். மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளின்படி தரமான வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டது. வீண் பழி சுமத்தி, களங்க ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.
News February 11, 2025
3,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் மெட்டா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739248635879_1173-normal-WIFI.webp)
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகம் முழுவதும் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த பணி நீக்கம் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிக்க அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.