News December 4, 2024
ஃபெஞ்சல் புயல், வெள்ள பலி 26ஆக உயர்வு

ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.
Similar News
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.
News September 18, 2025
இவர்களுக்கு ₹1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது

மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு செப்.15-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, எதுவும் வெளியாகாததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தகுதியில்லாதவர்களுக்கு ₹1000 கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தகுதி இல்லாமல் அரசு பணத்தை அனைவருக்கும் எடுத்துகொடுக்க முடியாது எனக் கூறிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்றார்.