News December 4, 2024

ஃபெஞ்சல் புயல், வெள்ள பலி 26ஆக உயர்வு

image

ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.

Similar News

News October 28, 2025

மாதம் ₹8,000 உதவித்தொகை: தமிழக அரசின் திட்டம்

image

58 வயதை தாண்டிய தமிழறிஞர்களுக்கு ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்’ மூலம் TN அரசு மாதந்தோறும் ₹8,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும், அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுபவர்கள் இறந்தால், நாமினிக்கு மாதந்தோறும் ₹3,000 கிடைக்கும். இதற்கு ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE IT.

News October 28, 2025

Influencer-களுக்கு செக்.. வந்தாச்சு புது சட்டம்!

image

ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் என்ஜினியர்கள் தான் இருப்பார்கள், அது இப்போது Influencer-களாக மாறியுள்ளது. அதில் தவறில்லை என்றாலும், ஒரு பொருளின் சாதக பாதகங்களை அறியாமலே பலரும் புரமோட் செய்கிறார்கள். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன. இதை தடுக்க, ஒரு பொருளை விளம்பரம் செய்பவர்கள், அதற்கான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை சீனா விதித்துள்ளது. இதை நம்மூரில் கொண்டுவரலாம் அல்லவா?

News October 28, 2025

விளம்பரத்திற்கு டெல்டாக்காரன் என சொல்லும் CM: விஜய்

image

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக திமுக அரசு நிறுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன் என ஸ்டாலின் பெருமை பேசிவருவதாகவும் அவர் சாடியுள்ளார். பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உண்மையாகவே போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!